Labels

Wednesday, September 02, 2020

காணொளிப் பேச்சுப் போட்டி மற்றும் காணொளிக் கட்டுரைப் போட்டிகள்

அன்பார்ந்த நண்பர்கள், பேராசிரியப் பெருமக்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அனைவருக்கும் வணக்கம்! வையத் தலைமை கொள் மற்றும் சக்தி பதிப்பகம் இணைந்து நடத்தும் மாபெரும் காணொளிப் பேச்சுப் போட்டி மற்றும் காணொளிக் கட்டுரைப் போட்டிகள் 1000 காணொளி உரைகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறப் போகும் மாபெரும் சங்கமம். மொத்தப் பரிசுகள் ரூ. 30000 “திருக்குறளில் மேலாண்மைச் சிந்தனைகள்” என்ற பொருண்மையில் கல்லூரிப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தமிழார்வலர்கள் துடிப்பு மிகு இளைஞர்கள் மற்றும் உலகமெங்கும் இருக்கும் தமிழர்களிடமிருந்து காணொளி உரைகளும் (பேச்சு), காணொளிக் கட்டுரைகளும், வரவேற்கப்படுகின்றன. காணொளிப் பேச்சுகளும், காணொளிக்கட்டுரைகளும் சுய நிர்வாகம், சுய முன்னேற்றம், ஆளுமைத் திறன்கள், சமூக முன்னேற்றம் போன்றவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளாமல் “உள்ளுவதெல்லாம்” நூலில் இடம்பெறுவதற்காக தனியே கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர், கட்டுரைகளை கணிணித் தட்டச்சு செய்து தங்கள் சுய விவரங்கள் மற்றும் புகைப்படத்துடன் அனுப்ப வேண்டும். மின் நூலிற்கான கட்டணம் ரூ.100, அச்சு நூலிற்கான கட்டணம் ரூ.300. கட்டணங்களை G-Pay மூலமாக 7904690749 என்ற எண்ணிற்கு அனுப்பிவிட்டு அதன் நகலை வாட்ஸ் ஆப்-பில் தெரிவிக்க வேண்டுகிறோம். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் திருக்குறளில் மேலாண்மைச் சிந்தனைகள் மாபெரும் காணொளிப் பேச்சுப் போட்டி, காணொளிக் கட்டுரைப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் Registration Form https://forms.gle/7GqzpMUpSn8WvQSo9 You Tube Video Link https://www.youtube.com/watch?v=_FFS_WeR0bM ஒருங்கிணைப்பாளர் பேரா. முனைவர். பா. கெளசல்யா 9176363139 / 7904687931

No comments:

Post a Comment