Labels

Thursday, April 10, 2025

_*வாழ்வு வசந்தமானது*_

 _பசியறிந்து சோறு போட ஒருவர் *இருக்கும் வரை...*_


_சாப்பிட்டாயா எனக்கேட்க ஒருவர்  *இருக்கும் வரை...*_

_தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்கிறாய் என விசாரிக்க ஒருவர் *இருக்கும் வரை....*_

_நோய் வருத்தும் இரவுகளில் கண் விழித்துப் பார்த்துக்கொள்ள ஒருவர் *இருக்கும் வரை...*_

_குரல் மாறுபாட்டில் மனநிலையைக் கணிக்க ஒருவர் *இருக்கும் வரை...*_

_போய்ச் சேர்ந்ததும் அழைப்பெடு என வழியனுப்ப ஒருவர் *இருக்கும் வரை...*_

_வீடடையக் காத்திருந்து கதவு திறக்க ஒருவர் *இருக்கும் வரை...*_

_தோற்றுப்போய் திரும்புகையில் தோள் சாய்த்துக்கொள்ள ஒருவர் *இருக்கும் வரை...*_

_போ என்றாலும் விட்டுப்போகாது சண்டை போட்டுக்கொண்டேனும் உடனிருக்க  ஒருவர் *இருக்கும் வரை...*_

_மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்துக்கொள்ள  ஒருவர் *இருக்கும் வரை....*_

_நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க ஒருவர் *இருக்கும் வரை...*_

_எதற்காகவும் எவரிடமும் நம்மை விட்டுக்கொடுக்காத ஒருவர் *இருக்கும் வரை...*_

_கூட்டத்தின் நடுவே தனித்துப்போகையில் கரங்கள் பற்றி நானிருக்கிறேனென உணர்த்த ஒருவர் *இருக்கும் வரை...*_

_தவறுகளைத் தவறென சுட்டிக்காட்டித் திருத்தும் ஒருவர் *இருக்கும் வரை...*_

_துயர் அழுத்தும் கணங்களில்  அருகிருந்து கண்ணீர்த்துடைக்க ஒருவர் _*இருக்கும் வரை....*_

_மனக்குறைகளைப் புலம்பித்தள்ளுகையில் காதுகொடுத்துக்கேட்க ஒருவர் *இருக்கும் வரை மட்டுமே...*_

_*வாழ்வு வசந்தமானது*_


 With Regards.,    
                                                                                                          

Dr Anthony Rahul Golden S 
M.Com., M.Phil., NET., 
Ph.D., MBA.,SET., NET., M.A., M.Sc. (Psy)., M.A.,  PGDBA., 
Asst. Professor of Commerce.Loyola College (Autonomous), Chennai - 34
Mobile No- 91+9176313545

https://yesrahul.blogspot.com/

https://orcid.org/0000-0001-8071-4801

https://www.researchgate.net/profile/Anthony-Golden-S 
https://scholar.google.com/citations?hl=en&user=faw7X-UAAAAJ

No comments:

Post a Comment